தித்திப்புத்-தித்தித்திருக்க தித்திப்பினைத் தந்ததந்த-
சாயி-என்ற நாமமல்லவா
முக்தியின் ஒளி-கொடுக்கும் பக்திக்கு-வ..ழி-வகுக்கும் சாயி-திரு நாமம் அல்லவா
வெங்க-அவ தூதர்-செய்த மாதவத்தி..லே-கிடைத்த - சொக்கத்தங்க நாமல்லவா
சத்தியத்தி..லே-உதித்த நித்தியத்தி..லே-இருத்த நாம..டைந்த-போதமல்லவா
சாயி-நாம ஜபத்திலே மூலப்-பொருள் விளங்கிடும் என்றுமிது திண்ணமல்லவா
பித்தனென்ற அந்த-சிவன் நம்மிடத்தில் கொண்ட-பித்து சத்தாக வந்ததல்லவா
பர்த்தியில் ப்ரசாந்தி தர புத்தியில்-நல் காந்தி தர அற்புதம் புரிந்ததல்லவா
அன்று-அந்த ஷீரடியில் எண்ணையன்று நீரெடுத்து தீப-ஒளி தந்ததல்லவா
பட்டியலில் இட்டு-அவன் செய்த-பல அற்புதங்கள் பாட்டினில்-ப..டித்துச் சொல்லவா
புத்தியிலுரைத்து-அவன் செய்த-லீலை சொல்ல-வல்ல பக்தர்களைச் சேர்ந்து-கொள்ள வா
சாயி நாமம்-சொல்ல-வா.. அதை நாளும் சொல்ல-வா ..!
----------------------------------------------------------------------------------