Monday, 2 June 2025

11.சாயீசா இறையோனே மறவாதே மறுக்காதே-Lord Sai forsake me not...!


 அமுதக் கடல்கடைந்து *வாருணைத் துளிசுவைத்து
*சுமுகத்தின் சுகிர்தநிலை சிரச்சுடரால் தான்பெற்று
எழுத்தில் வடிக்கவொண்ணா *நறைகமழுன் பதம்பிடித்து
சுழுமுனையின் எழுவிசையை முயன்றெழுப்பும் சாதகத்தை
அணுவளவும் பழகாத நாயேனாம் கீழோனென்னை
சாயீசா ஏழீசா மறவாதே மறுக்காதே
ஊழாலே சுழன்றழுகும் ஊனாலே உழல்கின்ற
கழுபிறப்பைப் போக்காயோ உன் கண்ணால் நோக்காயோ 
பாழ்மனதின் இருட்கதவை பொருளாலே கிடைக்காத
விழுப்பொருளே விரைசிவமே இமயமுறை விரிசடையே
அழுதிடவும் நீர்சுரக்கா கல்மனத்தின் மானிடன்நான்
தொழுதிடவும் அறிந்திலனே அருளிடுமா மாணிக்கமே!

*சுமுக சுகிர்தநிலை = பேரமைதி பெருநிலை
*வாருணை = ஆனந்தக் கள்
*நறைகமழ் = இன்பம் அளிக்கும்
*ஏழீசா = ஏழாம்  எண்ணுக்குரியோனே (சிவ பெருமான்) / எழுலகை ஆள்வோனே /  ஏழு
நாடிகளையும் ஆள்வோனே

---------------------------

Lord SAI, I do not know any worthy spiritual practice. Yet, please don't forsake me.
Please cut asunder the chain of birth death cycle by removing my ignorance.
Hey SAI, You are verily the Lord Shiva while I am a very insignificant soul who does not even shed tears on seeing you. I don't even know how to pray. Please don't give up on me, Show your grace.!



No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...