அவனுக்கு எவனுண்டு நேர் ?
இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்
அவனுக்கு எவனுண்டு நேர் ?
சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்
அவனுக்கு மலரென்று பேர்
அந்த மலர்வீசும் மணம்என்றும் மனம்தன்னிலே
அவனுக்கு மணமென்று பேர்
அந்த மணமெங்கும் நிறைகின்ற நினைப்பென்பதே
அவன் அன்பில் கட்டுண்டதேன் ?
அது அன்பற்ற முடவர்க்கு எட்டாததேன்
அவனுக்குக் குளிரென்று பேர்
அந்தக் குளிர்பட்டு கல்லிங்கு தளிர்விட்டதே
அதில் மனம்கொண்ட கிளர்ச்சிக்கு என்னென்றுபேர் ?
அந்த சிரிப்பேதான் அதைப்போக்கும் மருந்தாகுதே
அந்தத் தீச்சுட்டு நெஞ்செல்லாம் குளிர்கின்றதேன்?
என்றும் அவனின்றி நம்வாழ்வு பொய்யானதே
பின் ஏதுண்டு செய்வேலை சொர்க்கத்திலே
என்றும் அவனின்றி மனதுக்குத் திண்டாட்டமே
அவன் இல்லாது மனம்பொங்கும் துக்கத்திலே
அங்கு அவனின்றி மூச்சில்லை திக்கெட்டிலே
அணிசெய்யும் அணியாகத் திகழ்கின்ற தார் ?
பொங்கும் நீறாலே கல் நெஞ்சும் கரைகின்றதே
அவன்மண்ணுக்கு வந்திட்ட நிலவேதான் பார்
அதன் மோகத்தில் மனம்பறக்கும் காற்றாடியே
அன்று அவன்தொட்டு நின்றிட்ட தாகாயமே
விட்டுச் செல்கின்ற தின்பத்தின் சாயங்களே
அது கேட்டிட்ட உள்ளங்கள் நேராகுது
அது அன்பற்ற நெஞ்சத்தில் துஞ்சாதது
அன்புத் தாயன்று கொண்டிட்ட நெஞ்சாலது
நாமெண்ண யுகம்போகும் முடிக்கும் முன்னே
நம் மனம்எண்ணப் போமந்தப் பாவங்களே
ஆதி சேஷன்தான் கடல்மீது அவன்கொண்ட பாய்
அந்த கல்லென்ற மனம்கரைந்து தேறுங்களே
நீதேடாதே கிட்டாது சேவைக்கு நேர்
என்றும் பதில்சொல்லும் நின்றங்கு யுகத்துக்குமேல்
'அது' 'அது'வாக யுகம்பட்டு நிற்கின்றதே..!
SAIRAM
-----------------------------------------------------------------------------------
MENU